/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
/
கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : அக் 04, 2024 04:14 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி, ஆண்டாள், பெரிய மாரியம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் நவராத்திரி கொலு உற்சவம் நேற்று முதல் துவங்கியது .
இதனை முன்னிட்டு மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று மாலை 6:30 மணிக்கு சாகம்பரி அலங்காரத்தில் எழுந்தருளிய சிவகாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை ரகு பட்டர் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதுபோல் ஆண்டாள் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் நடந்த நவராத்திரி உற்சவத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் நவராத்திரி உற்சவம் சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.