sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேவை 24 மணி நேர அரசு மருத்துவமனை

/

தேவை 24 மணி நேர அரசு மருத்துவமனை

தேவை 24 மணி நேர அரசு மருத்துவமனை

தேவை 24 மணி நேர அரசு மருத்துவமனை


ADDED : ஏப் 22, 2025 05:34 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அரசு மருத்துவமனை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அரசு, தனியார் துவக்க பள்ளிகள் உள்ளன. நெசவுத்தொழில் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் இங்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அரசு மருத்துவமனை இதுவரை இல்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அம்மா மருந்தகமும் தற்போது செயல்பாட்டில் இல்லை.

இதனால் இப்பகுதி மக்கள் கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார் போன்ற நகரங்களுக்கு சென்று தான் மருத்துவ வசதி பெறும் சூழல் உள்ளது. விபத்து உயிர்காக்கும் சிகிச்சைகள் எளிதில் பெற முடியாத சிரமத்திற்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.

எனவே, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஒரு அரசு மருத்துவமனையை சுந்தரபாண்டியத்தில் உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.






      Dinamalar
      Follow us