sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய கற்கால கருவி தேய்ப்புப் பள்ளங்கள்

/

 ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய கற்கால கருவி தேய்ப்புப் பள்ளங்கள்

 ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய கற்கால கருவி தேய்ப்புப் பள்ளங்கள்

 ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய கற்கால கருவி தேய்ப்புப் பள்ளங்கள்


ADDED : டிச 12, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறையில் புதிய கற்காலக் கைக்கோடாரிகளை வழுவழுப்பாக்கும் போது உருவான தேய்ப்புப் பள்ளங்கள் தென் தமிழகத்தில் முதன்முறையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பாறையில் தேய்ப்புப் பள்ளங்கள் உள்ளன என நூர்சாகிபுரம் சு.சிவ குமார் கொடுத்த தகவலின் பேரில், அவருடன் இணைந்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறு வனத்தின் தலைவர் வே.ராஜகுரு அப்பகுதியில் ஆய்வு செய்தார்.

அவர்கள் கூறியதாவது:

தமிழக தொல்லியல் தளங்களின் அறிவியல் காலக் கணக்கீடுகள் மூலம் புதிய கற்காலம் கி.மு.7000 முதல் கி.மு.4000 வரை யிலானது என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறி வேளாண்மை, மட்பாண்டங்கள், நிரந்தரக் குடியிருப்புகள் ஆகியவை தோற்றம் பெற்றது புதிய கற்காலத்தில் தான்.

செண்பகத்தோப்பு, வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பாறையில் 4 தேய்ப்புப் பள்ளங்கள் உள்ளன. இவை புதிய கற்காலக் கைக் கோடாரிகளை தேய்த்து வழுவழுப்பாக்கும் போது உருவானவை. நான்கும் ஒரே அளவில் 10 செ.மீ. அகலத்தில் உள்ளன. 3 பள்ளங்கள் நேராக வும், ஒன்று அதன் மேற்பகுதியில் குறுக்காகவும் அமைந்துள்ளது.

நேராக உள்ள பள்ளங்கள் கற்கருவிகளை வழுவழுப்பாகத் தேய்க்கவும், குறுக்காக உள்ள சிறிய பள்ளம் அதை கூர்மையாக்கவும் பயன்பட்டிருக்கும்.

வட தமிழகத்தில் உள்ள இத்தகைய தேய்ப்புப் பள்ளங்களுடன் ஒப்பிடும் போது இவற்றின் ஆழம் குறைவாகவே உள்ளது. கற்கருவிகள் தேய்க்கு மிடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகள் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு சிற்றோடை ஓடிய தடம் உள்ளது.

தென் தமிழகத்தில் புதிய கற்கால நாகரிகம் நிலவியதன் தடயங்களை தே.கல்லுப்பட்டியில் மத்திய தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் அருகில் விழுப்பனுார், ராமநாத புரம் மாவட்டம் போகலுார், குலபதம் ஆகிய இடங்களில் புதிய கற்காலக் கருவிகளையும், மதுரை மாவட்டம் கோபால்சாமி மலையின் கீழ் உள்ள பாறைகளில் புதிய கற்காலத்தில் பயன்படுத்திய அரைப்புப் பள்ளங்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

தற்போது கண்டறிந்த தேய்ப்புப் பள்ளங்கள், 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இவை தென் தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகம் இருந்ததற்கான வலுவான சான்றாக உள்ளன. புதிய கற்கால தேய்ப்புப் பள் ளங்கள் தென் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை, என்றனர்.






      Dinamalar
      Follow us