sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நதிக்குடியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை ஸ்டாலின் முகாமில் பெண் ஆதங்கம்

/

நதிக்குடியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை ஸ்டாலின் முகாமில் பெண் ஆதங்கம்

நதிக்குடியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை ஸ்டாலின் முகாமில் பெண் ஆதங்கம்

நதிக்குடியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை ஸ்டாலின் முகாமில் பெண் ஆதங்கம்


ADDED : நவ 06, 2025 07:05 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நதிக்குடியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து 2 ஆண்டுகளாக மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சித்ரா என்பவர் தெரிவித்தார்.

வெம்பக்கோட்டை அருகே கொங்கலாபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இதில் கலெக்டர் சுகபுத்ரா, சாத்துார் எம்.எல்.ஏ., ரகுராமன் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர், அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 40 சென்ட் நிலத்தை மீட்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு அளித்த நதிக்குடியைச் சேர்ந்த சித்ரா,''தனி நபர் ஒருவர் அரசு நிலைத்தை ஆக்கிரமித்து வைத்து வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நுாற்றுக்கணக்கான மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. . மக்களுக்கு இருக்கும் அக்கறை கூட அரசு அலுவலர்களுக்கு இல்லை ,''என்றார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us