sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேத்துாரில் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்

/

சேத்துாரில் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்

சேத்துாரில் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்

சேத்துாரில் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்


ADDED : செப் 18, 2025 04:41 AM

Google News

ADDED : செப் 18, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துார் : மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ராஜபாளையம், தேவதானம், சேத்துார் பகுதிகளில் நீர் வரத்து அதிகம் உள்ளதால் நெல் சாகுபடி பரப்பு அதிகம். இந்நிலையில் கோடை முடிவடையும் நிலையில் முதல் போக சாகுபடிக்கு பிராக்குடி, நடுவக்குளம், சிலம்பநேரி கண்மாய் பாசன பகுதி விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வட மாநில ஆண் தொழிலாளர்களை பாரம்பரிய நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபடுத்தி வருகின்றனர். கூலி குறைவு என்பதால் விவசாயிகளும் இத் தொழிலாளர்களை அதிகம் நாடுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி குமார்: தற்போது நெல் நடவு பணிக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இருக்கும் ஆட்களை வைத்து துவக்கினாலும் ஏக்கருக்கு 20 நபர் வீதம் ரூ. 6 ஆயிரம் கேட்கின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் ஏக்கருக்கு 500 குறைத்து கூலி கொடுத்தாலும் பாரம்பரிய தொழிலாளர்களிடம் நாற்று நடவு செய்வதில் பாதி மட்டுமே ஆவதுடன் நெல் நாற்றுகள் இடையே சீரான இடைவெளி காற்றோட்டம் அதிக மகசூல் பெற முடியும்.

தொடர்ந்து பற்றாக்குறை ஏற்படும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு மாற்றாக வடமாநில தொழிலாளர்கள் இருப்பதுடன் செலவும் குறைவதால் அவர்களின் தேவை அதிகரிக்கிறது., என்றார்.






      Dinamalar
      Follow us