sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேர்தல் அறிவிப்பால் இல்லை; வீடியோ கான்பரன்ஸ் தொல்லை

/

தேர்தல் அறிவிப்பால் இல்லை; வீடியோ கான்பரன்ஸ் தொல்லை

தேர்தல் அறிவிப்பால் இல்லை; வீடியோ கான்பரன்ஸ் தொல்லை

தேர்தல் அறிவிப்பால் இல்லை; வீடியோ கான்பரன்ஸ் தொல்லை


ADDED : மார் 20, 2024 12:05 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தற்போது மாவட்ட, மண்டல, மாநில அளவிலான உயர் அதிகாரிகளின் வீடியோ கான்ப்ரன்ஸ் மீட்டிங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாலுகா அளவிலான அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளின் மீட்டிங்குகள், மாவட்ட அளவில் விருதுநகரிலும், மண்டல அளவில் திருநெல்வேலி , மதுரையிலும், மாநில அளவில் சென்னையிலும் நேரடியாக நடப்பது வழக்கம். இதில் மக்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள்.

கொரோனா காரணமாக நேரடி மீட்டிங்குகள் தவிர்க்கப்பட்டு தற்போது அதிகளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்து வந்தது. குறிப்பாக மாலை 4:00 மணிக்குமேல் துவங்கும் வீடியோ கான்ப்ரன்ஸ் மீட்டிங்குகள், பணி நேரம் முடிந்தும், இரவு 7:00 மணியை கடந்தும் நடப்பது வழக்கம். இதனால் பெண் அலுவலர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் தற்போது ஒவ்வொரு அரசு துறையின் சார்பில் நடத்தப்படும் வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us