sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் ரூ.200 கோடிக்கு நோட்புக் வர்த்தகம்: கடந்தாண்டை விட விலை 10 சதவீதம் குறைவு

/

சிவகாசியில் ரூ.200 கோடிக்கு நோட்புக் வர்த்தகம்: கடந்தாண்டை விட விலை 10 சதவீதம் குறைவு

சிவகாசியில் ரூ.200 கோடிக்கு நோட்புக் வர்த்தகம்: கடந்தாண்டை விட விலை 10 சதவீதம் குறைவு

சிவகாசியில் ரூ.200 கோடிக்கு நோட்புக் வர்த்தகம்: கடந்தாண்டை விட விலை 10 சதவீதம் குறைவு


UPDATED : மே 23, 2025 05:06 AM

ADDED : மே 23, 2025 02:07 AM

Google News

UPDATED : மே 23, 2025 05:06 AM ADDED : மே 23, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மூலப் பொருளான பேப்பர் விலை குறைவால் நோட்புக் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது. ரூ. 200 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளதால் நோட்புக் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தொழிலைப் போலவே அச்சகத்திற்கும் புகழ் பெற்றது. சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக 70 க்கும் மேற்பட்ட நோட்புக் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. பள்ளி துவங்க சில நாட்களே உள்ள நிலையில் இங்கு நோட்புக் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 20 பக்கம் முதல் 320 பக்கங்கள் கொண்ட பல்வேறு வகையிலான நோட்புக் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் நோட்புக் மொத்த உற்பத்தியில் சிவகாசியில் இருந்து 30 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் இங்கிருந்து புதுச்சேரி, கேரளாவிற்கும் நோட்புக் அனுப்பப்படுகின்றது. இங்கு ஆண்டுதோறும் ரூ. 150 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. கடந்த காலங்களில் ஆண்டுதோறும் நோட்புக் விலை ஏறிச்சென்ற நிலையில் 2024 ல் மூலப் பொருளான பேப்பர் விலை குறைவால் நோட் புக் விலையும் குறைந்தது. அதேபோல் இந்த ஆண்டும் பேப்பர் விலை 10 சதவீதம் குறைந்த நிலையில் நோட்புக்கின் விலையும் 10 சதவீதம் குறைந்துள்ளது.

தற்போது சிவகாசியில் நோட்புக் உற்பத்தி பணி இறுதி கட்டத்தை எட்டி தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த ஆண்டிற்கு பள்ளிகளில் இருந்து மொத்த ஆர்டர்கள் பெறப்பட்டு வியாபாரம் முடிந்துள்ளது. அதே சமயத்தில் பள்ளி கல்லுாரிகள் திறக்கும் சமயத்தில் கடைகளில் விற்பனை செய்வதற்கு ஜூன் மாதம் இறுதி வரை நோட் புக் உற்பத்தி நடைபெறும்.

ஏ.மாரிராஜன், சீமா நோட்புக் உரிமையாளர், சிவகாசி: நோட்புக் தயாரிக்கப் பயன்படும் பேப்பர் விலை மட்டும் குறைந்துள்ளது. மூலப் பொருட்களின் விலை குறையவில்லை ஆனாலும் நோட்புக் விலை இந்த ஆண்டு 10 சதவீதம் விலை குறைந்துள்ளது. 90 சதவீதம் மொத்த வியாபாரம் முடிந்துள்ளது. ஜூன் மாத இறுதியில் மொத்த வியாபாரமும் முடிந்துவிடும், என்றார்.






      Dinamalar
      Follow us