/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் அச்சம்; வளைவுகளில் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
/
ரோட்டோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் அச்சம்; வளைவுகளில் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ரோட்டோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் அச்சம்; வளைவுகளில் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ரோட்டோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் அச்சம்; வளைவுகளில் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : ஜன 13, 2025 04:08 AM
மாவட்டத்தில், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து கிராமப்புறங்களுக்கு ரோடு செல்கிறது. ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு ரோடு அமைக்கப்படுகிறது. பெரும்பாலும் அதிக வளைவுகள் கொண்ட ரோடாக இருக்கிறது.
டூ வீலர், கார், கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. பெரும்பாலான இடங்களில் இரு வாகனங்கள் விலகிச் செல்ல இடம் இருப்பது இல்லை. விலகிச் செல்வதற்கு போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. சில நேரங்களில் யார் ஒதுங்கி செல்வது என்பதில் பிரச்னை ஏற்பட்டு தகராறு நடக்கிறது. பராமரிப்பு பணிகள் சரிவர இருப்பதில்லை.
பெரும்பாலான கிராமப்புற, முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரோடுகளில் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. வாகனங்களில் உரசுவதுடன், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. வாகனங்களை சேதப்படுத்துகிறது. பயணிகளை காயப்படுத்துகின்றன.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாது, அதிவேகமாக வரும் வாகனங்கள் வளைவுகளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடக்கிறது. இரவு நேரங்களில் டூவீலரில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
காற்று அடிக்கும் காலங்களில் வாகனங்களின் மேல் பட்டு வாகன ஓட்டிகளை நிலைகுலையச் செய்கிறது. வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களுக்குள் திருடர்கள் மறைந்து தப்பிக்கின்றனர். ரோடு பணி முடிந்தவுடன் கடமை முடிந்து விட்டதாக ஒப்பந்ததாரர்கள், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். போதிய பராமரிப்பு பணிகளை முறையாக செய்வது கிடையாது.
மழை நேரங்களில் அடர்த்தியாக வளரும் சீமைக் கருவேல கிளைகள் ரோட்டில் விழுகின்றன. போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்தி வருவதுடன், அடிக்கடி நடக்கும் விபத்துக்கு காரணமாக இருக்கிறது. தனியாக டூவீலரில் செல்ல முடியாமல் பலர் தவிக்கின்றனர்.
எனவே அடர்த்தியாக வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அப்புறபடுத்தி, வளைவுகளில் வாகனங்கள் இடையூறு இன்றி செல்ல, நெடுஞ்சாலை துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.