/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காயல்குடி ஆற்றில் கருவேல மரங்கள்
/
காயல்குடி ஆற்றில் கருவேல மரங்கள்
ADDED : ஜூன் 27, 2025 12:30 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டை வழியாகச் செல்லும் காயல்குடி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. எனவே துார்வாரி அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம், மாதாங்கோவில் பட்டி, புலிப்பாறைப்பட்டி, திருவேங்கடபுரம், நதிக்குடி, எதிர்கோட்டை வழியாக காயல்குடி ஆறுசென்று வெம்பக்கோட்டை அணையில் சேர்கிறது.
இந்த காயல்குடி ஆற்றினை நம்பி எதிர்கோட்டையில் 400 ஏக்கரில் சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகிறது. தவிர குடிநீர் ஆதாரமும் கிடைத்து வருகிறது. மேலும் மோட்டார் பாசனத்திற்கும் ஆதாரமாக இருந்தது. இந்நிலையில் ஆறு முழுவதுமே சிறிதும் இடைவெளியின்றி சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது.
இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தும் அதனை பயன்படுத்த முடியவில்லை. எனவே ஆற்றினை முழுமையாக துார்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.