sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சோலையான மீசலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் அசத்தல்

/

சோலையான மீசலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் அசத்தல்

சோலையான மீசலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் அசத்தல்

சோலையான மீசலுார் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் அசத்தல்


ADDED : ஜன 01, 2024 04:59 AM

Google News

ADDED : ஜன 01, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் நாளுக்குள் நாள் பெருகி வரும் தொழிற்சாலைகள், அவை வெளியேற்றும் புகை, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் கார்பன் டை ஆக்ஸைடு அளவு தொடர்ந்து அதிரித்து வருகிறது. இதனால் மழைக்காலம், வெயில் காலம், பனிக்காலம் உள்ளிட்ட காலநிலைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் பருவமழை தவறுதல், வெயில் அதிரித்தல் உள்ளிட்ட இயற்கையின் சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்கள் பாதிப்புள்ளாகி வருகின்றன.

கல்லுாரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் பயிலும் மாணவர்களுக்கு வளர்பருவத்திலேயே இயற்கை மாசுபடுத்தாமல் வாழ்கையை வாழ்தல், இயற்கை பேணுதல் போன்றவற்றை பற்றி தெளிவான அறிவுரை வழங்குவது இன்றியமையாததாக உள்ளது. இதனால் வருங்கால தலை முறையினரான மாணவர்களுக்கு காடுகள், அது சார்ந்த நீராதாரங்களை மாசடைவது தடுக்க வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் விருதுநகர் மீசலுார் த.அ.சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் என்ற அமைப்பு பள்ளி தலைமையாசிரியரின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் 6 முதல் 9 வரை பயிலும் மாணவர்கள் 8 பேர் சேர்ந்து ஒரு குழு என 6 குழுக்கள் வீதம் மொத்தம் 48 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள வேம்பு, புங்கை, நவாப்பழமரம், அரச மரம், வில்வம், முருங்கை போன்ற பல மரங்களை நடவு செய்துள்ளனர். இந்த மரங்களை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.

மேலும் நொச்சி, துளசி உள்ளிட்ட மூலிகை செடிகளும், நார்த்தங்காய், மாதுளை பழமரங்களையும் நடவு செய்து நீர் ஊற்றி வளர்த்து வருகின்றனர். எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி, என்ற தலைப்பில் வளாகத்தில் மற்றொரு பகுதியில் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தோட்டப்பயிர்களும் நடவு செய்து பராமரித்து வளர்த்து வருகின்றனர். இதன் மூலம் பெறப்படும் காய்கறிகள் பள்ளியின் சத்துணவுக்கு பயன்படுத்தப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பு, மதியம் உணவு இடைவேளை போன்ற நேரங்களில் மாணவர்கள் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us