sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 'ஸ்லீப்பர்' பெட்டி குறைப்பு உத்தரவு ரத்து

/

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 'ஸ்லீப்பர்' பெட்டி குறைப்பு உத்தரவு ரத்து

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 'ஸ்லீப்பர்' பெட்டி குறைப்பு உத்தரவு ரத்து

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 'ஸ்லீப்பர்' பெட்டி குறைப்பு உத்தரவு ரத்து


ADDED : ஜூன் 05, 2025 02:19 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளாக மாற்றும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை- - செங்கோட்டை இடையே பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக சென்று வருகிறது. மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த ரயிலில் முன்பதிவு தொடங்கிய வேகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விடும்.

முதல் வகுப்பு ஏசி பெட்டி 1, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி 2, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 5, சாதாரண படுக்கை முன்பதிவு பெட்டிகள் 8, முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 என மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆக.2 முதல் பொதிகை ரயிலில் சாதாரண படுக்கை பெட்டி எண்ணிக்கையில் ஒன்றை குறைத்து ஏசி பெட்டி ஒன்றை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. சாதாரண பெட்டிகள் குறைப்பால் நடுத்தர பயணிகள் பாதிக்கப்படுவர் என கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து பெட்டிகள் மாற்றும் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வழக்கமான பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us