ADDED : நவ 24, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தையை சேர்ந்தவர் கருப்பசாமி, பெயின்டர். மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
நேற்று பாலவநத்தத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாரம் கட்டி 3 வது மாடியின் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாரம் அறுந்ததில் கருப்பசாமி கீழே விழுந்து பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

