ADDED : மார் 31, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவிற்கான சாட்டுதல் வைபவம் மார்ச் 16ல் நடந்தது. நேற்று கொடியேற்றம் நடந்தது.
ஏப். 6ல் பங்குனிப் பொங்கல், ஏப். 7ல் கயிறு குத்து, அக்னிச்சட்டி எடுத்தல், ஏப். 8ல் தேரோட்டம், ஏப். 10ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்ட பின் ஏப். 13ல் திருவிழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை ஹிந்து நாடார் தேவஸ்தான தலைவர் தங்கராஜன், செயலாளர் கனகவேல், பொருளாளர் பொன்னப்பன், நிர்வாகிகள் சுந்தரவேல், ஆனந்தவேல் செய்தனர்.