sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டில் நிற்கும் பயணிகள்

/

 வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டில் நிற்கும் பயணிகள்

 வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டில் நிற்கும் பயணிகள்

 வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டில் நிற்கும் பயணிகள்


ADDED : டிச 21, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அனைத்து பஸ்களும் பயணிகளை ரோட்டிலேயே ஏற்றி இறக்கி செல்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்தும் ஏற்படுகிறது. எனவே இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம், தீயணைப்பு நிலையம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், அரசு பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் வெம்பக்கோட்டையைச் சுற்றிலும் 200 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன.

வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சந்தையாகவும் இருப்பதால் எப்பொழுதும் மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம், சாத்துார், கோவில்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, திருவேங்கடம் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அரசு, தனியார் பஸ்கள் வெம்பக்கோட்டை ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகிறது.

மழை, வெயில் காலங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்க இடம் இன்றி ரோட்டிலும் கடைகளின் ஒரமும் நிற்க வேண்டியுள்ளது. பள்ளி மாணவர்கள் தங்களையும், புத்தகப் பைகளையும் காத்துக் கொள்வதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே வெம்பக்கோட்டையில் விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்பகுதியினர் கூறுகையில், வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு போலீஸ் குடியிருப்புகள் அருகே காலியிடம் உள்ளது. எனவே இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்கின்றனர்.






      Dinamalar
      Follow us