sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் தீக்காய சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை நோயாளிகள் பரிதவிப்பு

/

புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் தீக்காய சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை நோயாளிகள் பரிதவிப்பு

புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் தீக்காய சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை நோயாளிகள் பரிதவிப்பு

புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் தீக்காய சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை நோயாளிகள் பரிதவிப்பு


ADDED : டிச 13, 2024 03:11 AM

Google News

ADDED : டிச 13, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை.

திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்பட 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் துவங்கப்பட்டது. இங்கு தீக்காய சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை நிரந்தர டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.

மேலும் மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் தீக்காயத்திற்கு சிகிச்சை பெறுபவர்கள் மேல் சிகிச்சைக்காக புதிய மருத்துவக்கல்லுாரிக்கு மாற்றப்படுகின்றனர். ஆனால் உள், வெளி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை டாக்டர்கள் மருத்துவம் பார்க்கும் நிலையே தொடர்கிறது. மாற்றுப் பணியாக வரும் தீக்காய சிகிச்சை மருத்துவர்கள் நிலையாக இருப்பதில்லை.

இதனால் மருத்துவக்கல்லுாரியாக இருந்தும் பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக நோயாளிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். எனவே புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us