sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தி.மு.க., அரசு மீது மக்கள் எரிமலை போல் அதிருப்தியில் உள்ளனர்: கிருஷ்ணசாமி பு.த., தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

/

தி.மு.க., அரசு மீது மக்கள் எரிமலை போல் அதிருப்தியில் உள்ளனர்: கிருஷ்ணசாமி பு.த., தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

தி.மு.க., அரசு மீது மக்கள் எரிமலை போல் அதிருப்தியில் உள்ளனர்: கிருஷ்ணசாமி பு.த., தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

தி.மு.க., அரசு மீது மக்கள் எரிமலை போல் அதிருப்தியில் உள்ளனர்: கிருஷ்ணசாமி பு.த., தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி


ADDED : ஆக 27, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 27, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்:''விளம்பர மாடல் தி.மு.க., அரசு மீது மக்கள் எரிமலை போல் அதிருப்தியில் உள்ளனர்,'' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் அவர் கூறியதாவது:

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் இருக்கன்குடி ஊராட்சியில் இருந்து பிரித்து 1995 ல் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சசிகலா தலையீட்டால் நத்தத்துபட்டி ஊராட்சியுடன் அரசியல் நிர்வாக குறுக்கீடு காரணமாக இணைக்கப்பட்டுள்ளது. இருக்கன்குடி ஊராட்சியில் கோயிலை மீண்டும் இணைக்க வேண்டும். 2024 அக்டோபரில் சென்னை உயர் நீதிமன்றம் இருக்கன்குடிகோயில் எல்லை குறித்து நேரில் விசாரித்து கலெக்டர் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவு இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மாவட்ட அமைச்சர்களான தங்கம் தென்னரசு சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோரின் குறுக்கீட்டால் காலதாமதம் செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி இருக்கன்குடி ஊராட்சியுடன் கோயிலை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி செப்.,24ல் கலெக்டர் அலுவலகம் முன் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும். 30 நாள் சிறையில் இருந்தால் பிரதமர் உட்பட அமைச்சர்கள் பதவி காலியாகும் என்ற சட்டம் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்வதை தடுப்பதற்கான நல்ல சட்டம். இந்த சட்டத்தால் ஊழல் செய்வது குறையும். தமிழகத்தில் தற்போது விளம்பரமாடல் அரசாக தி.மு.க., அரசு உள்ளது. விளம்பரம் செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என எண்ணுகின்றனர்.

ஆனால் அடித்தட்டு மக்களிடம் எரிமலை போல் அரசுக்கு எதிரான அதிருப்தி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை சட்டசபை தேர்தலோடு நடத்திட வேண்டும். இதனால் தேர்தல் செலவு குறையும். தேர்தல் செலவுகளை குறைக்க நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கருத்து என்றார்.

தனித்து நிற்கலாம்


இருக்கண்குடியில் கிருஷ்ணசாமி கூறுகையில் 'அ.தி.மு.க., கூட்டணி ஜான் பாண்டியனை ஆதரிப்பதாக இருந்தால் நான் விலகி விடுவேன். இரு திராவிட கட்சிகளும் மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கவே விரும்புகின்றன. வரும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்தும் நிற்கலாம்,' என தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us