/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாரணாபுரம், பள்ளபட்டியில் நாய்களால் மக்கள் அவதி
/
நாரணாபுரம், பள்ளபட்டியில் நாய்களால் மக்கள் அவதி
ADDED : ஜன 30, 2025 04:50 AM
சிவகாசி: சிவகாசி அருகே பள்ளப்பட்டி, நாரணாபுரம் ஊராட்சி நாரணாபுரம் ரோடு, 56 வீட்டு காலனி பகுதியில் திரியும் நாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே நாரணாபுரம் ரோடு 56 வீட்டு காலனியில் நாய்கள் வெறி பிடித்து தெருவில் போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகின்றது. தெருவில் குழந்தைகள் விளையாட முடியவில்லை. மேலும் டூவீலர்களில் செல்பவர்களை விரட்டும்போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். பள்ளபட்டி ஊராட்சி உசேன் காலனி, சிலோன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் நடமாடுகின்ற நாய்களை அகற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

