/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுகாதாரகேட்டில் அம்மா உணவகம் சிரமத்தில் சாப்பிட வருபவர்கள்
/
சுகாதாரகேட்டில் அம்மா உணவகம் சிரமத்தில் சாப்பிட வருபவர்கள்
சுகாதாரகேட்டில் அம்மா உணவகம் சிரமத்தில் சாப்பிட வருபவர்கள்
சுகாதாரகேட்டில் அம்மா உணவகம் சிரமத்தில் சாப்பிட வருபவர்கள்
ADDED : ஜன 29, 2025 06:47 AM

சாத்துார் : சாத்துார் அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றத்தால் சாப்பிட வருபவர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
சாத்துார் வடக்குரத வீதியில் அம்மா உணவகம் அருகில் காய்கறி மார்க்கெட்டும் உள்ளது.
காய்கறி மார்க்கெட் வரும் வியாபாரிகளும் மக்களும் அம்மா உணவகம் அருகில் உள்ள காலி இடத்தை சிறுநீர் கழிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக அம்மா உணவகத்தில் உணவு அருந்துபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் துர்நாற்றத்தால் அவதிப்படும் நிலை உள்ளது.
நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக முள்செடிகளை வெட்டி போட்டுள்ளனர்.
இருந்த போதும் தொடர்ந்து இந்த பகுதியை திறந்த வெளி சிறுநீர் கழிப்பறையாக பயன்படுத்தி வருவதால் இவ்வழியாக நடந்து செல்லும் மக்களும் அம்மா உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் அம்மா உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

