sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கூமாபட்டியில் மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு

/

கூமாபட்டியில் மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு

கூமாபட்டியில் மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு

கூமாபட்டியில் மதுக்கடை திறக்க மக்கள் எதிர்ப்பு


ADDED : ஜன 31, 2024 12:07 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டி ராமசாமியாபுரத்தில் மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் மதுக்கடை திறக்க இரண்டு முறை டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால், மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் டாஸ்மாக் நிர்வாகம் பின் வாங்கியது. மதுக்கடை திறந்தால் வீண் தகராறுகள், சாதி மோதல்கள் ஏற்படும் என போலீஸ் தரப்பிலும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் அங்கு மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. நேற்று மதுக்கடை திறக்க உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இப்பகுதியில் தினந்தோறும் தகராறுகள் ஏற்பட்டு வரும் நிலையில் மதுக்கடை திறப்பது, தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us