sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நேதாஜி நகரில் ரோடு வசதி இன்றி மக்கள் அவதி

/

நேதாஜி நகரில் ரோடு வசதி இன்றி மக்கள் அவதி

நேதாஜி நகரில் ரோடு வசதி இன்றி மக்கள் அவதி

நேதாஜி நகரில் ரோடு வசதி இன்றி மக்கள் அவதி


ADDED : டிச 28, 2024 08:09 AM

Google News

ADDED : டிச 28, 2024 08:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே நேதாஜி நகரில் கடந்த 20 ஆண்டுகளாக ரோடு வசதி இன்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாத்துார் ஊராட்சி ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி நேதாஜி நகரில் 20 ஆண்டுகளாக முறையான ரோடு வசதி இல்லை. ஊராட்சியின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள நேதாஜி நகரில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

மெயின் ரோட்டில் இருந்து நகருக்குள் செல்லும் ரோடும் நகருக்கு உள்ளே உள்ள தெருரோடுகளும் மண் சாலையாக உள்ளது. சிறிய மழை பெய்தாலும் ரோடு சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

மேலும் மழை பெய்த சில நாட்களில் செடிகள் பாதையில் முளைத்து விடுகின்றன. இதில் விஷப் பூச்சிகள் அதிக அளவில் நடமாடுகின்றன.

மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் இப்பகுதி வீடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஊராட்சியில் ரோடு போட வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் இந்தப் பகுதியில் ரோடு போட நடவடிக்கை எடுக்கவில்லை எனமக்கள் புகார் கூறுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us