/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேர் நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலக கட்டடம் சேதம்
/
பேர் நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலக கட்டடம் சேதம்
ADDED : டிச 13, 2024 03:56 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர் நாயக்கன்பட்டியில் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர் நாயக்கன்பட்டியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி அலுவலகத்திற்கு கட்டடம் கட்டப்பட்டது. தற்போது வரை பயன்பாட்டில் உள்ள இந்த கட்டடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. அலுவலக அறை, ஊராட்சி தலைவர் அறை சேதம் அடைந்திருப்பதால் பல்வேறு தேவைகளுக்கும் வருகின்ற மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இக்கட்டடத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டும் முழுமையாக சீரமைக்கப்படாததால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இக்கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு என புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.