/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைப்பு; ஆறாக ரோட்டில் ஓடிய குடிநீர்
/
குழாய் உடைப்பு; ஆறாக ரோட்டில் ஓடிய குடிநீர்
ADDED : பிப் 01, 2024 07:12 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பெடுத்து தண்ணீர் ஆறாக ஓடியதுடன் ரோட்டின் ஒரு பகுதி அடைபட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
காந்தி சிலை ரவுண்டானா அடுத்த ரயில்வே பீடர் ரோடு முன்பு உள்ள குடிநீர் குழாய் நேற்று காலை அழுத்தம் காரணமாக உடைப்பு எடுத்து பீறிட்டு குடிநீர் வெளியேறியது.
தென்காசி ரோட்டில் இணைப்பு பகுதியில் நடந்த உடைப்பால் கருதி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வரும் இந்த ரோட்டில் தடையால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது. பழுது நீக்கும் பணியை மேற்கொண்டதில் அப்பகுதி கடந்து சென்ற பஸ்கள் கனரக வாகனங்கள், டூ வீலர்கள் சிக்கலுக்கு உள்ளாகின.