/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமி கர்ப்பம் சிறுவன் மீது போக்சோ வழக்கு
/
சிறுமி கர்ப்பம் சிறுவன் மீது போக்சோ வழக்கு
ADDED : மார் 26, 2025 01:53 AM
சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இம்மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 16 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். காதலித்த இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமானார். 8 மாதம் கர்ப்பமான சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது வயது 16 என்பது தெரியவந்தது.
சமூக நல அலுவலர் பூங்கொடி சிறுமியிடம் விசாரித்த போது அவருடன் படிக்கும் சிறுவன் காதலித்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.
சமூக நல அலுவலர் போலீசில் புகார் செய்தார். 16 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.