ADDED : அக் 14, 2024 08:49 AM
பட்டாசு பறிமுதல்
சிவகாசி: பாரதியார் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 33. இவர் தனது வீட்டில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
சாக்கடையில் தவறி விழுந்து பலி
சிவகாசி: காமராஜபுரம் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் 54. அப்பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில் இருளில் இவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் சாக்கடையில் தவறி விழுந்து காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்
சிவகாசி: ஆனைக்குட்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யன் காளை 23. இவர் திருத்தங்கல் அரசு பள்ளி அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.