நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோதிரம் திருட்டு; பெண் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் அம்பளபுலி பஜார் பகுதி நகை கடைக்கு வந்த இளம் பெண் பத்துக்கும் மேற்பட்ட மாடல்களை பார்த்த பின் தன்னுடன் வந்தவர்களை அழைத்து வருவதாக கூறி சென்று விட்டார். ஊழியர்கள் மோதிரங்களை சரி பார்த்த போது ரூ. 21,000 மதிப்புள்ள மோதிரம் திருடு போனது தெரிந்தது. தெற்கு போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்ததில் மோதிரத்தை திருடிய முனியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உஷாராணி 27, என தெரிந்து நகையை கைப்பற்றி கைது செய்துள்ளனர்.