sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : நவ 19, 2024 04:52 AM

Google News

ADDED : நவ 19, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது

சாத்துார்: சாத்துார் போலீசார் பழைய படந்தால் ரோட்டில் வாகன சோதனை செய்த போதுஅவ்வழியாக வந்த துாத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 49 .ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது . சாத்துார் போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

35 மதுபாட்டில் பறிமுதல்: ஒருவர் கைது

சாத்துார்: சாத்துார் திருவிருந்தான்பட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி,52.ஆலம்பட்டி விலக்கில் காட்டுப்பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்தார்.ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து 180 மி.லி. அளவு கொண்ட 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவன் தற்கொலை

ராஜபாளையம்: ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டி வெளிநாட்டில் வேலை செய்கிறார். மனைவி வெங்கடேஸ்வரி. இரண்டு மகன்கள் உள்ளனர். சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மூத்த மகன் அஜய் ராம்16, பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் நிலையில் இரண்டு நாளாக தமிழ் பாடப்பிரிவு கைடு வாங்கித் தர தாயிடம் கேட்டுள்ளார். மாலையில் வாங்கித் தருவதாக கூறி வெளியே சென்ற நிலையில் வீட்டின் அறையில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us