நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா பதுக்கல்; வாலிபர் கைது
விருதுநகர்: பி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குமாரவேல் 26. இவர் ஆமத்துார் கருப்பசாமி கோவில் அருகே 10 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததால் போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல்; மூவர் கைது
விருதுநகர்: அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் 33. இவர் ஜன. 16 இரவு 10:00 மணிக்கு வீட்டிற்கு சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராம், சரவணக்குமார், ஈஸ்வரன் ஆகியோரால் தாக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும் கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

