sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : பிப் 04, 2025 04:49 AM

Google News

ADDED : பிப் 04, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாசு திரி பதுக்கியவர் கைது

விருதுநகர்: கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி 34. இவர் வெள்ளூர் பஸ் ஸ்டாப் அருகே பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 5 குரோஸ் மிஷின் திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.

பெண் தொழிலாளி கண் பார்வை இழப்பு

வத்திராயிருப்பு: கோட்டையூரை சேர்ந்தவர் காளீஸ்வரி 27, இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூடை பின்னும் வேலை செய்து வந்தார். வேலை நிரந்தரம் காரணமாக அதிக கூடைகள் பின்னுமாறு நிர்வாகம் வற்புறுத்தியதால் அவசரமாக கூடை பின்னும் போது அவரது கைவிரல் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டு கண்பார்வை இழந்துள்ளார். வத்திராயிருப்பு போலீசார் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் மீது வழக்கு

திருமங்கலம்: திருமங்கலம் காமராஜர்புரம் சுந்தரபாண்டி 34. விருதுநகர் ஆயுதப்படை போலீசாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது, சின்னப்பாண்டி என்பவரோடு தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. சின்னப்பாண்டியையும், அவரது மகள் பாண்டீஸ்வரியையும் தாக்கியதாக சுந்தரபாண்டி மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அசாம் மாநில வாலிபர் பலி

சிவகாசி: அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டத்தை சேர்ந்தவர் அனீஸ் உராங்க் 20. இவர் 8 மாதமாக சிவகாசி அருகில் துரைச்சாமிபுரத்தில் உள்ள கிரசர் குவாரியில் வேலை பார்த்து வந்தார். இவர் குவாரியில் உள்ள கிடங்கில் குளித்த போது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us