ADDED : ஜூலை 24, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-----
அனுமதியின்றி பட்டாசு
தயாரித்தவர் கைது
சிவகாசி, ஜூலை 24 -
சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி 35. இவருக்கு வடமலாபுரத்தில் பிரகாஷ் பைரோ டெக் என்ற பெயரில் பட்டாசு கடை உள்ளது. இங்கு இவர் சுற்றிலும் வேலி அமைத்து அரசு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து ரூ. ஒரு லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.