sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜூன் 15, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலர் திருடியவர் கைது

வத்திராயிருப்பு: அம்மாபட்டியைச் சேர்ந்தவர் மாளிகைப்பாறை 29, இவர் நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோவில் அருகில் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஒர்க்ஷாப்பில் துாங்கும் போது, அங்கிருந்த டூவிலர் ஒன்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜபாளையத்தை சேர்ந்த சங்கிலி 36, என்பவரை கைது செய்தனர்.

புகையிலை பறிமுதல்

சாத்துார்: சாத்துாரில் தனியார் பள்ளி அருகே புகையிலை விற்றுக் கொண்டிருந்த தென்காசி மாவட்டம் வி.கே.,புதுாரைச் சேர்ந்த அண்ணாமலை 32,ஐ சோதனையிட்ட போது அவரிடம் 225 கிராம் புகையிலை பாக்கெட் இருப்பது தெரிந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுபாட்டில் பறிமுதல்

சாத்துார்: மேலக் கோதை நாச்சியார்புரம் விஜயன் 45. வீட்டில் வைத்து மது பாட்டில் விற்றார். போலீசார் அவரது வீட்டை சோதனை செய்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் மூதாட்டி பலி

சிவகாசி: முருகன் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமத்தாள் 85. இவர் அதே பகுதியில் நடந்து சென்ற போது ராமர் 24, ஓட்டி வந்த லோடு வேன் மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us