sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஆக 27, 2025 12:24 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாய் இரு குழந்தைகளுடன் மாயம்



சிவகாசி : பெரிய பொட்டல்பட்டியை சேர்ந்தவர் மான்ராஜ் மனைவி அனிதா 33. இவர்களுக்கு 12 வயதில் ஆண் குழந்தை, 10 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மான்ராஜ் இறந்துவிட்டார். அனிதா தனது உறவினருடன் பழகி வந்த நிலையில் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் அனிதா தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

----

பட்டாசு பறிமுதல்



சிவகாசி : பாறைப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் 53. இவர் சாத்தூர் ரோட்டில் தனக்கு சொந்தமாக உள்ள பட்டாசு கடை அருகில் தகர செட்டில் பட்டாசுகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் வைத்திருந்தார். கிழக்கு போலீசார் அவரை கைது செய்து ரூ. 19,800 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

* கிளியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 42. இவர் புலிப்பாறைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் தகர செட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

*சிவகாசி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் நீராத்துலிங்கம் 58. இவர் போடு ரெட்டியாபட்டி அருகே பட்டாசு ஆலை அருகே கட்டடத்தில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

----

தற்கொலை



சிவகாசி பி.கே.என்.,ரோடு சோலை காலனியைச் சேர்ந்தவர் செல்வ முருகன் 48. இவர் மிக்ஸி, கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்யும் கடை நடத்தி வந்தார். போதிய வருமானம் இல்லாததால் கடன் பிரச்னையில் தவித்துள்ளார். இந்நிலையில் அவர் கடையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us