sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 போலீஸ் செய்தி

/

 போலீஸ் செய்தி

 போலீஸ் செய்தி

 போலீஸ் செய்தி


ADDED : டிச 26, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருட்டு : 3 பேர் கைது

சாத்துார்: ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் செந்துாரன், 36. மேலக் காந்தி நகரில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். கதவு உடைக்கப்பட்டு ஒர்க்ஷாப்பில் இருந்த ரூ7000 மதிப்பிலான பொருட்கள் திருட்டுப் போனது. விசாரணையில் ஆண்டாள்புரத்தை சேர்ந்த தென் ஹரிஹரன் , 24. மேலும் 16, 17 வயதுடைய இரு சிறுவர்கள் பொருட்களை திருடியது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து பொருட்களை மீட்ட சாத்துார் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

விருதுநகர்: பெரியகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 35. இவரது மனைவி செல்வராணி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. மனைவி தனது 5 வயது மகனுடன் தனியாக சென்று விட்டார். இதன்பின் தாயாரும் இறந்ததால் மன வேதனையில் இருந்த பாலாஜி, தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு உணவருந்தி விட்டு துாங்கச் செல்வதாக வீட்டின் மாடிக்குச் சென்றவர் மனைவியின் சேலையில் துாக்கிட்டு இறந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பாட்டி, பேரனுக்கு வெட்டு

விருதுநகர்: சூலக்கரை அருகே நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் முருகானந்தம், 48. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மது போதையில் அவ்வழியாக வந்த 10ம் வகுப்பு மாணவரை வழிமறித்து கத்தியால் தாக்கினார். அதை தடுக்கச் சென்ற மாணவரின் பாட்டி ராஜலட்சுமியையும் 65, கத்தியால் வெட்டினார். இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சூலக்கரை போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us