ADDED : ஆக 11, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே ராயர்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா 34. இவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக உள்ளார்.
நேற்று இரவு 7:30 மணிக்கு சூலக்கரை போலீஸ் கேண்டீனில் பொருட்களை வாங்கி விட்டு நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். பின்னால் வந்த கார் மோதியதில் கார்த்திக் ராஜா தலையில் பலத்த காயமடைந்தார். மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.