/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணித்தள பொறுப்பாளர்கள் நியமனத்தில் அரசியல்: அனுபவமற்றவர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு
/
பணித்தள பொறுப்பாளர்கள் நியமனத்தில் அரசியல்: அனுபவமற்றவர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு
பணித்தள பொறுப்பாளர்கள் நியமனத்தில் அரசியல்: அனுபவமற்றவர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு
பணித்தள பொறுப்பாளர்கள் நியமனத்தில் அரசியல்: அனுபவமற்றவர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு
ADDED : ஏப் 04, 2025 06:18 AM

விருதுநகர் ஒன்றியத்தில் 45 ஊராட்சிகள் உள்ளன. இதில் நுாறு நாள் திட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இவர்களை கண்காணிக்கவும், சம்பளம் வழங்கவும், வேலை வாங்குவதுமே பணித்தள பொறுப்பாளர்களின் வேலை.
இவர்களை நுாறு நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவது வழக்கம். ஆனால் தகுதி வாய்ந்தவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அனுபவத்தோடு பணிபுரிந்து வந்த பணித்தள பொறுப்பாளர்கள் பல்வேறு அரசியல் காரணங்களை கூறி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இடத்திற்கு புதிய நியமனமாக ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பட்டியல் தயாரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் முன்பு பணிபுரிந்த பணித்தள பொறுப்பாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். என்ன காரணத்திற்காக நீக்குகின்றனர், என்ன நடக்கிறது என புரியாமல் உள்ளனர். ஆனால் அரசியல் காரணத்திற்காக மட்டும் இது நடந்துள்ளது தெரிகிறது என்கின்றனர்.
35 ஊராட்சிகளுக்கான பணித்தள பொறுப்பாளர்களை கட்சி சார்புடையவர்களாக நியமித்ததாக பாதிக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளர்கள் குமுறுகின்றனர். அனுபவம் மிக்க எங்களை புறக்கணித்து விட்டு, கட்சி அடிப்படையில் பணிநியமனம் செய்வது நியாமல்ல என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, பணித்தள பொறுப்பாளர்களை அனுபவம், திறன் அடிப்படையிலே நியமித்துள்ளோம். கட்சியினர் தலையீடு என்பது தவறான தகவல், என்றனர்.

