sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் 308 ஆக அதிகரிக்கும் ஓட்டுச்சாவடிகள்

/

ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் 308 ஆக அதிகரிக்கும் ஓட்டுச்சாவடிகள்

ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் 308 ஆக அதிகரிக்கும் ஓட்டுச்சாவடிகள்

ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் 308 ஆக அதிகரிக்கும் ஓட்டுச்சாவடிகள்


ADDED : அக் 01, 2025 07:19 AM

Google News

ADDED : அக் 01, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 283 லிருந்து 308 ஆக உயர்த்தும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2025 ஜன. 6 தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் 1,17, 050 ஆண் வாக்காளர்கள், 1 , 23 , 310 பெண் வாக்காளர்கள், 42 மூன்றாம் பாலினம் உட்பட 2, 40, 402 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக தற்போது 283 ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் 1200க்கும் மேற்பட்ட ஓட்டுகள் கொண்டதாக உள்ளது.

இந்நிலையில் ஓட்டுப்பதிவு சதவீத எண்ணிக்கை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி 1300க்கு மேற்பட்ட ஓட்டுகள் உள்ள சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது.

இதன்படி இத்தொகுதியில் 25 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்து 308 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மிக குறைந்த அளவில் மலைவாழ் மக்கள் வசிக்கும் செண்பகத்தோப்பு, தாணிப்பாறை ராம்நகர் பகுதிகளிலும் ஓட்டு சாவடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடங்களை கண்டறிந்து தயார் செய்யும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us