ADDED : அக் 30, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தீபாவளி பண்டிகை காரணமாக மிகவும் குறைந்த அளவு பக்தர்களே வந்திருந்தனர்.
கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமாகலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். இதனை அங்கிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.