ADDED : நவ 14, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு நேற்று சிறப்புடன் நடந்தது. நேற்று காலை 6:30 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் மதியம் 12:00 மணி வரை மிகவும் குறைவான பக்தர்களே மலையேறினர்.
கோயிலில் சுந்தரமாகலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

