sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கடையம் கைதி ஓட்டம் எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

/

கடையம் கைதி ஓட்டம் எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

கடையம் கைதி ஓட்டம் எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

கடையம் கைதி ஓட்டம் எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்


ADDED : நவ 07, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கேரள மாநிலம் வையூர் மத்திய சிறை கைதி பாலமுருகனை 30, திருட்டு வழக்கு ஒன்றில் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் அழைத்து சென்ற போது தப்பி ஓடினார். இதையடுத்து பாதுகாப்புக்கு சென்ற பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ., நாகராஜன், ஏட்டுக்கள் ரவிஜோதி, சுதாகர் ஆகியோரை விருதுநகர் எஸ்.பி., கண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருட்டு வழக்கில் தற்போது கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வையூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நவ.,3 அழைத்து வந்தனர்.

இவரை மீண்டும் வையூர் மத்திய சிறையில் ஒப்படைக்க பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ., நாகராஜன், ஏட்டுக்கள் ரவிஜோதி, சுதாகர் ஆகியோர் காரில் அழைத்து சென்றனர். வழியில் இயற்கை உபாதை கழிப்பதாக கூறி இறங்கிய பாலமுருகன் தப்பியோடினார். அவரை போலீசார் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் வையூர் போலீஸ் ஸ்டேஷனில் பாலமுருகனை கண்டுப்பிடித்து கொடுக்க புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது. பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக எஸ்.எஸ்.ஐ., நாகராஜன், ஏட்டுக்கள் ரவிஜோதி, சுதாகரை எஸ்.பி., கண்ணன் சஸ்பெண்ட் செய்தார்.






      Dinamalar
      Follow us