sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட மக்கள்

/

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட மக்கள்

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட மக்கள்

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட மக்கள்


ADDED : ஜன 02, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; விருதுநகர் நகராட்சியுடன் சிவஞானபுரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னமூப்பன்பட்டி மக்கள் எம்.எல்.ஏ., சீனிவாசனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் நகராட்சியுடன் கூரைக்குண்டு ஊராட்சியின் அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கோட்டைப்பட்டி, குமாரசாமிராஜா நகர், ரோசல்பட்டி ஊராட்சியில் ரோசல்பட்டி, குமாரபுரம், ரெங்கநாதபுரம், சிவஞானபுரம் ஊராட்சியில் சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, லட்சுமி நகர், பாவாலி ஊராட்சியில் அய்யனார் நகர், கலைஞர் நகர், பராசக்தி நகர், முத்துராமலிங்க நகர் பகுதிகளையும் இணைக்க நகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்புதலுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து சிவஞானபுரம் ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னமூப்பன்பட்டி கிராம மக்கள் நேற்று காலையில் விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின் மக்களிடம்எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுவை பெற்று, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us