/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மயான வசதி கோரி விருதுநகரில் மறியல்
/
மயான வசதி கோரி விருதுநகரில் மறியல்
ADDED : ஜூலை 26, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் மயானத்தில் வசதிகள் வேண்டி ரோடு மறியல் நடந்தது.
விருதுநகர் கம்மாபட்டி, அம்பேத்கர் நகர், கே.கே.எஸ்.எஸ்.என்., நகர், அண்ணா நகர், புதுத்தெரு பகுதி ஹிந்து பறையர் மக்கள் கூரைக்குண்டு கோட்டைப்பட்டி மயானத்தில் தகனம், புதைத்து வருகின்றனர். நேற்று இறந்த ஒருவரின் உடலை எரித்தனர். கூரை இல்லாததால் பிணத்தின் மேலே தகரம் வைத்து எரிக்க நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மயானத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், அளவைக்கல் நடக் கோரி ரோடு மறியலில் ஈடுபட்டனர். வருவாய் ஆய்வாளர் ரியாஸ் முகமது சமரசம் செய்தார். 7 நாட்களில் அளவைக்கல் நடுவதாக கூறினார். மக்கள் கலைந்து சென்றனர்.