/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அலைபேசிகள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அலைபேசிகள் வழங்கல்
ADDED : ஜன 12, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா அலைபேசிகள் வழங்கப்பட்டன.
பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 25 பேருக்கு தலா ரூ.13 ஆயிரத்து 549 மதிப்பிலான ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 725 மதிப்பிலான விலையில்லா அலைபேசிகளை வழங்கினார்.திட்ட இயக்குநர் தண்டபாணி, சமூகபாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அனிதா, உட்பட பலர் பங்கேற்றனர்.