ADDED : செப் 29, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சுப்ரபாத பூஜைகள் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மாலையில் பெருமாள் கிரிவலம் நடந்தது.
* செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில், அர்ச்சனாபுரம் அழகிய மணவாள பெருமாள் கோயில், வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில்களில் புரட்டாசி 2ம் சனி உற்ஸவம் மிக சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.