sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சீனிவாச பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசி முதல் சனி உற்ஸவம்

/

சீனிவாச பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசி முதல் சனி உற்ஸவம்

சீனிவாச பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசி முதல் சனி உற்ஸவம்

சீனிவாச பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசி முதல் சனி உற்ஸவம்


ADDED : செப் 20, 2024 06:19 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை முன்னிட்டு நாளை (செப்.21) அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இக் கோயிலில் புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் சீனிவாச பெருமாளை தரிசிக்க தென் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

இந்த ஆண்டும் நாளை (செப். 21 ) முதல் சனிக்கிழமை உற்ஸவம்துவங்குகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை, சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. இதையடுத்து பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதிகாலை 5:30 மணிக்கு கால சாந்தி பூஜை, மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு பெருமாள் கிரிவலம் நடக்கிறது.

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான அக்.5 அன்று மட்டும் அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us