/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செப்.24ல் ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் துவக்கம்
/
செப்.24ல் ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் துவக்கம்
செப்.24ல் ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் துவக்கம்
செப்.24ல் ஸ்ரீவி.,வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் துவக்கம்
ADDED : செப் 20, 2025 03:36 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவ திருவிழா செப். 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று காலை 6:45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை மண்டபம் எழுந்தருளல், இரவு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது.
அக். 2 காலை 7:40 மணிக்கு செப்பு தேரோட்டம், அக். 7 மாலை 5:30 மணிக்கு கோபால விலாசத்தில் புஷ்ப யாகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்துள்ளனர்.
நவராத்திரி உற்ஸவம் செப். 23 முதல் 9 நாட்கள் ஆண்டாள் நவராத்திரி கொலு உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் மாலை 6:30 மணிக்கு கல்யாண மண்டபத்தில் ஆண்டாள் கொலு வீற்றிருத்தல் நடக்கிறது. அக். 1ல் சரஸ்வதி பூஜை, 2ல் விஜயதசமி, ரெங்கமன்னார் பாரிவேட்டை நடக்கிறது.