ADDED : அக் 12, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி நான்காம் சனி உற்ஸவத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை 2:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப பூஜை நடந்தது.
பின்னர் ராஜா அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாலை 4:00 மணிக்கு சீனிவாச பெருமாள் கிரிவலம், கருட பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.
செண்பகத்தோப்பு காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில், ஆண்டாள் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.