ADDED : பிப் 24, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறையில் காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோயிலில் இரவு 6:00 மணிக்குமேல் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை, கோயில் பூஜாரிகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.