/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ்; ஏற்கனவே உள்ளதை பராமரிப்பதும் அவசியம்
/
ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ்; ஏற்கனவே உள்ளதை பராமரிப்பதும் அவசியம்
ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ்; ஏற்கனவே உள்ளதை பராமரிப்பதும் அவசியம்
ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ்; ஏற்கனவே உள்ளதை பராமரிப்பதும் அவசியம்
ADDED : மே 06, 2024 12:18 AM
காரியாபட்டி -திருச்சுழி, நரிக்குடி- பார்த்திபனுார், காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் ரோடு, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீ வில்லிபுத்துார், சாத்துார், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊருகளுக்கு செல்லும் ரோடுகளில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி இவ்விடங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், நான்கு ரோடுகள் சந்திக்கும் இடங்கள், அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை பலகை வைப்பதுடன் குவி லென்ஸ்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஒரு சில இடங்களில் குவிலென்ஸ்கள் பொறுத்த நெடுஞ்சாலை துறை, போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் அங்கு ஓரளவுக்கு விபத்து நடப்பது குறைந்தது. தற்போது வாகன பெருக்கத்தால் சந்திப்பு, நெரிசல் மிக்க ரோடுகளில் போக்குவரத்து அதிகரித்து விட்டதால் புதிதாக பல்வேறு இடங்களில் குவி லென்ஸ்கள் பொருத்தப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே பொருத்திய குவிலென்ஸ்கள் துாசு படிந்து, எதிரே வரும் வாகனங்களை காட்டாமல் பேருக்குத்தான் உள்ளன.
இதை சம்பந்தப்பட்ட துறையினருக்கும் தெரிந்தும் கண்டும் காணாமல் விட்டு விட்டதால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடக்கின்றன. வைக்கப்பட்ட இடங்களில் குவிலென்ஸ்கள் நாளடைவில் சேதம் அடைந்தும் வருகின்றன. சில இடங்களில் திசை மாறி உள்ளன. முலாம் பூச்சி தேய்ந்து எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுவதால் விபத்து ஏற்படுகின்றன.
இரவு நேரங்களில் இன்னும் ஆபத்தாக உள்ளது. விபத்தை தடுக்கும் பொருட்டு அபாயகரமான இடங்களில் குவி லென்ஸ்கள் பொருத்துவது அவசியம். ஏற்கனவே பொருத்தப்பட்ட இடங்களில் கண்ணாடிகள் உடைந்தும் திசை மாறியும் முலாம் பூச்சு தேய்ந்தும் உள்ளன. பராமரிக்காமல் விட்டு விட்டதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.