ADDED : செப் 07, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: மாவட்ட இளைஞர் நல அலுவலர் காவ்யா முத்துலெட்சுமி செய்திக்குறிப்பு: மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு துறை சார்பில் நடக்கவுள்ள விக்ஷித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக் 2027ஐ முன்னிட்டு மை பாரத் மூலம் இணையதளம் வழியாக வினாடி வினா போட்டி நடத்தப்படும்.
இதில் 15 வயது முதல் 29 வயது வரை இளைஞர்கள், விக்ஷித் பாரத் சேலஞ்ச் ட்ராக் எனப்படும் முதலாவது சுற்றில் முதலில் வினாடி வினா போட்டியும், அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த கட்டங்களில் கட்டுரை, ஓவியம், நடனம் உட்பட பல போட்டிகள் நடக்கிறது, எனவே செப். 30ல் நடக்கும் இப்போட்டியில் பங்கேற்க இளைஞர்கள் MyBharat.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.
