/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் ரெய்டு
/
பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வீடுகளில் ரெய்டு
ADDED : ஆக 13, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர் வீடு, அலுவலகங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் நேற்று முன்தினம் துவங்கிய வருமான வரித்துறையினர் சோதனை நேற்று 2வது நாளாக தொடர்ந்தது.
சிவகாசியில் உள்ள இரு பட்டாசு நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், சிவகாசியில் இருந்து பட்டாசுகளை கொண்டு செல்லும் இரு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உட்பட எட்டு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு சோதனையை துவக்கினர்.
இரண்டாவது நாளாக நேற்று காலை 10:00 மணி முதல் சோதனை நடந்தது.