/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் மழை பக்தர்களுக்கு தடை
/
சதுரகிரியில் மழை பக்தர்களுக்கு தடை
ADDED : டிச 13, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி மலையில் மழை பெய்து வருவதால் கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் அறிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: வானிலை ஆய்வு மையம் டிச. 12 முதல் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளதாலும், தாணிப்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (டிச. 13) முதல் டிச. 16 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

